கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Sunday, March 8, 2015

செளந்திரநாயகி அம்மன்

சவுந்திரநாயகி, தனது தவப்பயனால் ஈசனை மணந்த ஒரு மானுடப்பெண் ஆவாள். கருவூருக்கு மேற்கே அப்பிபாளையம் எனும் சிறிய கிராமம் இருந்தது. இங்கு வேட்டுவர் இனத்தை சேர்ந்த தனவந்தருக்கு வடிவுடையாள் என்ற பெண் இருந்தாள். திருமண வயது வந்ததும், பசுபதீஸ்வரரையே திருமணம் செய்ய எண்ணினாள். அதை பெற்றோரிடமும் தெரிவித்தாள். அன்று இரவு வடிவுடையாளின் பெற்றோர் கனவில் பசுபதீஸ்வரர் தோன்றினார். 

‘உமது மகளை, யாம் பங்குனி உத்திர திருவிழா ஏழாம் நாளில் திருமணம் செய்வோம். அதன் அடையாளமாக அப்பிபாளையம் முழுவதும் அன்று பூச்சொரிந்து இருக்கும்’ என்று கூறினார். இறைவன் சொல்லியபடி பங்குனி உத்திர திரு விழாவின் ஏழாம் நாள் உதயம் ஆன அன்று, அப்பிபாளயம் முழுவதும் பூ மழை பொழிந்து இருந்தது. அங்கே தியானத்தில் இருந்த வடிவுடையாளின் கழுத்தினை தெய்வீக ஒளி வீசும் மலர் மாலை அலங்கரித்து இருந்தது. அனைவரும் வடிவுடையாளை தொழுது பல்லக்கில் ஏற்றி பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு கொண்டு வந்தனர். 

கருவறைக்குள் சென்ற வடிவுடையாள் இறைவனோடு ஐக்கியமானார் என்று தல புராணம் தெரிவிக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இன்று வரையில் பங்குனி மாதம் ஆறாம் நாள் பசுபதீஸ்வரர் அப்பிபாளையம் செல்வதும், அங்கிருந்து ஏழாம் நாள் கரூர் பசுபதீஸ்வரர் ஆலயத்திற்கு வடிவுடையாளுடன் வருவதும் நடைபெற்று வருகிறது. இச்சையெனும் சக்தி, ஞானமெனும் தியானத்தால், கிரியை எனும் இறைசக்தியோடு ஒன்று கலப்பதே வடிவுடைநாயகியின் வரலாறு ஆகும்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.