கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 18, 2013

குறவர்கள்



குறவர்கள்


குறவர்கள் எனப்படும் சாதியினர் பண்டைய தமிழ் சமூகத்தினர். இவர்கள் நானிலங்களில் மருதம் எனப்படும் மலையும் மலை சார்ந்த பகுதிகளில் வாழ்ந்து வந்தவர்கள். இவர்கள் சமூகத்தை சேர்ந்த வள்ளி என்பவளை கடவுளான முருகன் மணந்து கொண்டதாக இந்து சமயக் கதைகள் கூறுகின்றன.

பழக்க வழக்கங்கள்
"நானில மக்களுள் ஒருவர்களான குறவர்களின் பழக்கவழக்கங்கள் அறிய முடிகின்றது. சங்க இலக்கியங்களிலும் குறவர்கள் பற்றிய செய்தி மிகுதியாக காணப்பெறுகின்றன. குறவர்கள் தேனையும் கிழங்கையும் விற்றுப் பண்ட மாற்றாக, மீன் நெய்யினையும் நறவையும் பெறுவர். உடும்பிறைச்சியோடு, கடமான் தசை,முள்ளம் பன்றியின் ஊன், மூங்கி குழாயில் ஊற்றி வைத்த தேனிறல், நெய்யால் செய்த கள், புளிப்புச் சுவையுடைய உலையாக ஏற்றி ஆக்கிய மூங்கிலரிசிச் சோறு, பலாவிதையின் மாவு ஆகியவற்றை நல்கி மலைவாழ்நர் விருந்தோம்புவர் என மலைப்படுகடாம் கூறும். இதே நிலையினை மீனாட்சியம்மை குறத்திலும் காணமுடிகின்றது. குறவர்கள் செழித்த கொடியிலிருந்து வள்ளிக் கிழங்கை அகழ்ந்து எடுத்து உணவாக உட்கொள்கின்றனர். மலையின்கண் உள்ள குறிஞ்சி மலரை முல்லைக் கொடியில் வைத்துத் தொடுத்தும், பசுந்தழையையும் மரவுரியையும் ஆடையாக உடுத்திக் கொள்கின்றனர். விருந்தினருக்கு தேனும், தினையும் வழங்கி விருந்தோம்புகின்றனர்."  என்று இச்சமூகத்தினரின் பழக்க வழக்கங்களை இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.